பொள்ளாச்சியில் குடிபோதையில் தகராறு; தட்டிகேட்ட தொழிலாளிக்கு அடி-உதை டிரைவர் கைது

published 2 years ago

பொள்ளாச்சியில் குடிபோதையில் தகராறு; தட்டிகேட்ட தொழிலாளிக்கு அடி-உதை டிரைவர் கைது

கோவை, ஜூலை.13- கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொழில்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 42). மில் தொழிலாளி. இவரது மனைவி கவிதா (38).

அதேபகுதியைச் சேர்ந்தவர் முகமது மொய்தீன் (47). கார் டிரைவர். இவர் அடிக்கடி குடிபோதையில் அந்த பகுதியில் தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று அதே போன்று குடிபோதையில் கனகராஜின் வீட்டின் முன்பு வெகு நேரமாகச் சத்தம் போட்டுக் கொண்டு இருந்தார்.

இதனைப் பார்த்த  கனகராஜ் அவரிடம் சென்று வீட்டின் முன்பு சத்தம் போட வேண்டாம் இங்கு இருந்து சென்று விடு என்றார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  கணவரின் சத்தத்தைக் கேட்டு கவிதா ஓடி வந்தார். அவர் மொய்தீனை தகராறில் ஈடுபடாமல் செல்லுமாறு கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த  மொய்தீன்  கணவன்-மனைவி 2 பேரையும்  தகாத வார்த்தைகளால் திட்டினார். பின்னர் கனகராஜை தாக்கி விட்டு 2 பேரையும் மிரட்டி அங்கிருந்து சென்றார். இதுகுறித்து கவிதா பொள்ளாச்சி கிழக்கு போலீசில் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மொய்தீனை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe