கவுண்டம்பாளையம், குனியமுத்தூரில் கஞ்சா பறிமுதல்- 4 பேர் கைது...

published 11 months ago

கவுண்டம்பாளையம், குனியமுத்தூரில் கஞ்சா பறிமுதல்- 4 பேர் கைது...

கோவை: கோவை கவுண்டம்பாளையம் போலீசார் நேற்று ரோந்து பணி சென்று கொண்டிருந்தனர். 

அப்போது நல்லாம்பாளையம் தயிர் இட்டேரி ரோட்டில் உள்ள காலி இடத்தில் 3 பேர் நின்றிருந்தனர். அவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். 

போலீசார் அவர்களிடம் சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கவுண்டம்பாளையம் வஉசி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாபு(38), துடியலூரை சேர்ந்த பெயிண்டர் டேவிட் சாம்(40), நல்லாம்பாளையம் அன்னையப்பன் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கந்தசாமி(35) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
 

இதேபோல், குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரி பின்புறம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மரக்கடை திருமால் நகரை சேர்ந்த ஷேக் மொய்தீன்(38) என்பவரை குனியமுத்தூர் போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe