துடியலூரில் டி.வி., சத்தத்தை குறைக்க கூறிய பெண்: மண்டையை உடைத்த பக்கத்து வீட்டுக்காரர்!

published 11 months ago

துடியலூரில் டி.வி., சத்தத்தை குறைக்க கூறிய பெண்: மண்டையை உடைத்த பக்கத்து வீட்டுக்காரர்!

கோவை: கோவையில் டி.வி., சத்தம் அதிகமாக வைத்ததைக் கண்டித்து குறைக்க சொன்ன பெண்ணை கோடாரியால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை அடுத்த துடியலூர் அண்ணா காலணியைச் சேர்ந்தவர் ரகு மனைவி கனகா(34). இவரது சகோதரியின் கணவர் ஜெகதீஷ்(38). கூலி தொழிலாளி. 

இவர்கள் குடும்பத்துடன் அருகருகே வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஜெகதீஷ் வீட்டில் டி.வி., பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கனகா டி.வி., சத்தத்தை குறைத்து வைக்குமாறு தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதில் ஆத்திரமடைந்த ஜெகதீஷ் தகாத வார்த்தைகளால் பேசி வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து கனகா மீது வீசினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

வலியால் அலறிய அவரை குடும்பத்தினர் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஜெகதீசை கைது செய்தனர். 

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe