வேட்புமனு தாக்கல் செய்யும் முன் கோனியம்மன் கோவிலில் வழிபட்ட அண்ணாமலை...

published 10 months ago

வேட்புமனு தாக்கல் செய்யும் முன் கோனியம்மன் கோவிலில் வழிபட்ட அண்ணாமலை...

கோவை: கோவை நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் மாநில தலைவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளார்.

 

இந்நிலையில் கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.அப்போது அங்கு திருமணம் நடைபெற்ற புதுமண தம்பதிகளான கோவைப்புதூரை சேர்ந்த ரவி-தேவிகா தம்பதியினர் அண்ணாமலையின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

இந்நிகழ்விற்கு 1989 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வீர கணேசன் தாயார் அழைத்துவரப்பட்டிருந்தார் அவரிடம் அண்ணாமலை ஆசி பெற்றார்.

நிகழ்வில் வானதி சீனிவாசன் அர்ஜுன் சம்பத் சுதாகர் ரெட்டி உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe