கோவையில் போதை மீட்பு மையத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட மாணவர் உயிரிழப்பு!

published 10 months ago

கோவையில் போதை மீட்பு மையத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட மாணவர் உயிரிழப்பு!

கோவை: கோவையில் உள்ள போதை மீட்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் போலீசார் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கரூரைச் சேர்ந்த அரசு மருத்துவர் பிச்சைமுத்துவின் மகன் கிஷோர். இவர் கோவையில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ., படித்து வருகிறார். இதனிடையே கிஷோர் போதைக்கு அடிமையானதால் அவரை கோவில்பாளையத்தில் உள்ள ஹெல்பிங் ஹேண்ட்ஸ் என்ற போதை மீட்பு மையத்தில் சேர்த்துள்ளனர்.

அங்கு இருந்த மாணவர் கிஷோர் வீட்டிற்கு செல்வதாகக் கூறி அடம்பிடித்துக் கூச்சலிட்டுள்ளார். இதனால் மீட்பு மைய ஊழியர்கள் கிஷோரின் கை கால்களைக் கட்டி அவரின் வாயில் துணி வைத்து அடைத்துள்ளனர்.

இதனால் மாணவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மையத்தின் வார்டன் அரவிந்த் ஹரி, உளவியல் மருத்துவர் ஜவ பிரசன்னா ராஜ் ஆகியோர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe