கொடநாடு வழக்கு: ஜெயலலிதாவின் கார் டிரைவரிடம் விசாரணை

published 2 years ago

கொடநாடு வழக்கு: ஜெயலலிதாவின் கார் டிரைவரிடம் விசாரணை

கோவை, ஜூலை.15 கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறுவிசாரணை நடந்து வருகிறது. இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் உதவியாளர் பழனிசாமி, புதுச்சேரியை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளரான நவீன் பாலாஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். 

நேற்று மதுரையைச் சேர்ந்த டெக்ஸ்டைல் அதிபரான  லாஜி வோரோவிடம் தனிப்படை போலீசார் விசாரணை செய்தனர். அவரிடம் 2017-ம் ஆண்டு சென்னை சி.ஐ.டி. நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.அவரும் தனக்குத் தெரிந்த தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் கார் டிரைவரான குணசேகரனிடம் விசாரணை நடத்த முடிவு செய்த தனிப்படை போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து அவர் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் தனிப்படை போலீசார் முன்பு ஆஜரானார்.

இவர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிடம் டிரைவராக பணியாற்றி உள்ளார். இதனால் இவருக்கு கனகராஜ் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கும் என்பதால் கனகராஜ் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கொள்ளை நடந்த பின்பு கனகராஜ் உங்களைத் தொடர்பு கொண்டு பேசினரா? கொடநாடு வழக்கில் உங்களுக்கு ஏதாவது தெரியுமா? என பல்வேறு கேள்விகளைக் கேட்டு விசாரணை மேற்கொண்டனர்.அவர் போலீசார் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அதனை போலீசார் பதிவு செய்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe