பாஜக கூறும் பொய்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்- திமுக வேட்பாளர் பிரச்சாரம்...

published 10 months ago

பாஜக கூறும் பொய்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்- திமுக வேட்பாளர் பிரச்சாரம்...

கோவை: இண்டியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதியின் திமுக  வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். அதன் தொடர்ச்சியாக, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பீளமேடு பகுதி கழகம், சித்தாப்புதூர் பகுதியில் இருந்து வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அப்பகுதி பொதுமக்கள் மலர் தூவி வேட்பாளரை வரவேற்றனர்.

 

பின்னர் வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அரிபுரம் பகுதியில் பேசுகையில்;

இந்தப் பகுதியை எனக்கு நன்கு தெரியும். நான் இங்கே வடக்கு மாமன்ற தலைவராக பணியாற்றிய  காலம் முதற்கொண்டு, நன்கு அறிவேன்.  திமுக அரசு செய்த, செய்கின்ற  சாதனைகளை எல்லாம் கூறி நாங்கள், வாக்குகள் சேகரித்து  வருகின்றோம். மகளிர் உரிமைத் தொகை,  மகளிர் இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவைகள்  மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மகளிர் உரிமைத்தொகை  விடுபட்டவர்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் கிடைக்கப்பெறும்.
திமுக அரசின் சாதனைகளை  கூறி தான் உங்களிடம் வாக்குகளை சேர்த்து வருகின்றோம்.

ஆனால் எதிரணியில் இருக்கக்கூடிய வெளியூரை சேர்ந்த வேட்பாளர்களுக்கு   அரிபுரம் தெரியாது. இந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகள் என்னவென்று தெரியாது. அவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்,  கேஸ்  சிலிண்டர் விலை ஏற்றம்,   பெட்ரோல் - டீசல் விலையேற்றம்,  கட்டுப்படுத்தாத ஒன்றிய பாஜக அரசு, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவார்களா? இதை நம்ப முடியுமா? பொய்யான வாக்குறுதிகளை கூறி வாக்கு கேட்பார்கள் அதை நம்பி ஏமாந்து விடாதீர்கள். ஒன்றிய பாஜக அரசால் விலையேற்றம், நிதி அளிப்பதில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது. இதையெல்லாம் மறந்துவிடக்கூடாது. உங்களிடம் நிறைய பொய் சொல்லி வருவார்கள்,  இதை எல்லாம் நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

இந்த பகுதியில்  உள்ளவர்களுக்கு  வீடுகள் வேண்டும் என்று கேட்டு உள்ளீர்கள் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பட்டாவோ, அல்லது வேறிடத்தில்  வீடோ உங்களுக்கு  ஏற்பாடு செய்வதற்காக அமைச்சரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தல் முடிந்தவுடன் முழு வீச்சில் அதை செய்து கொடுப்போம் என்பதை நாங்கள் உத்திரவாதம் கொடுக்கின்றோம். நாங்கள் என்றைக்கும் கூட இருப்போம்.
நான் கூப்பிடும் தூரத்தில் தான் இருக்கின்றேன். மக்களுடன் மக்களாக இருக்க வேண்டும் என மாண்புமிகு முதல்வரும், கழக தலைவருமான  தளபதி அவர்கள் உத்திரவிட்டுள்ளார்.  அதனால் உங்களிடத்தில்  தான், நாங்கள் இருப்போம், உங்கள் குறைகளை தீர்த்து வைப்போம் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe