தீரன் சின்னமலையின் 268 வது பிறந்த நாள்- மரியாதை செலுத்திய கோவை அதிமுக வேட்பாளர்...

published 2 weeks ago

தீரன் சின்னமலையின் 268 வது பிறந்த நாள்- மரியாதை செலுத்திய கோவை அதிமுக வேட்பாளர்...

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/FeDW9xUn2U8AbIvNabKtk1

கோவை: முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி வேலுமணி, கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்டோர் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 268 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.




 


சுதந்திர போராட்ட களத்தில் சிறுவயதிலேயே ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக குரல்கொடுத்து கொங்கு மண்டலத்தில் ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வெற்றிகண்டவர் தீரன் சின்னமலை. குறிப்பாக ஆங்கிலேய அரசின் வரிவசூலுக்கு எதிராக செயல்பட்டு பொதுமக்களிடம் வசூல்செய்த பணத்தை தீரன் சின்னமலை பறித்து சிவன் மலைக்கும் சென்னிமலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்து சென்றான் என்று சூளுரைத்த வீரர் தீரன் சின்னமலை அவரது வீரத்தையும், தியாகத்தையும் பெருமை படுத்தும் விதமாக இன்று அவரது 268 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் இதயதெய்வம் மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த தீரன் சின்னமலையின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி. 

மேலும் இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம், கழக வேட்பாளர் சிங்கை ஜி ராமச்சந்திரன் மற்றும் கார்த்திகேயன்,  தலைமை கழக செய்திதொடர்பாளர் நிர்மலா பெரியசாமி உட்பட கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw