கோவையல் ஊழியர் காயமடைந்த விவகாரம்- விடுதி பெண் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு…

published 9 months ago

கோவையல் ஊழியர் காயமடைந்த விவகாரம்- விடுதி பெண் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு…

கோவை: கோவை ஆவாரம்பாளையம் ரோடு பிபிஎல் கார்னர் அருகே தனியார் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு சித்தாபுதூரை சேர்ந்த பண்ணாரி(60) என்ற பெண் துய்மை பணி செய்து வருகிறார். சம்பவத்தன்று அவர் விடுதி வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது அங்கு தேங்கிய தண்ணீரில் மாப்பை கொண்டு சுத்தம் செய்த போது அவர் தவறி கீழே விழுந்தததில் முழங்காலில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவரக்ள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். முன்னதாக, விடுதி வளாகத்தில் கசிவு காரணமாக அதிகளவில் தண்ணீர் தேங்குவதாகவும், இதனை சரி செய்து தரும்படி, ஊழியர்கள் விடுதி உரிமையாளர் வசந்தா என்பவரிடம் பலமுறை கூறியதாகவும், அதனை அவர் செய்து கொடுக்கவில்லை என தெரிகிறது. 

இது குறித்து கீழே விழுந்து காயமடைந்த பெண் காட்டூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் அஜாக்கிரதையாக ஊழியரை பணிக்கு அமர்த்தியதாக விடுதி பெண் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe