சரவணம்பட்டியில் ஒர்க்‌ஷாப்பில் தீ விபத்து- கார்கள் எரிந்து சேதம்…

published 1 week ago

சரவணம்பட்டியில் ஒர்க்‌ஷாப்பில் தீ விபத்து- கார்கள் எரிந்து சேதம்…

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/FeDW9xUn2U8AbIvNabKtk1

கோவை: கோவை சரவணம்பட்டியில் ஒர்க்‌ஷாப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கார்கள், 2 பைக்குகள் தீயில் எரிந்து நாசமானது.


கோவை காந்திமா நகரை சேர்ந்தவர் தாமஸ் வில்லியம்(34). இவர் சரவணம்பட்டி எஸ்பிஜி நகரில் கார் பழுது பார்க்கும் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று அவர் ஒர்க்‌ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் ஒர்க்‌ஷாப்பில் இருந்து கரும்புகை வெளியேறியது. 


சிறிது நேரத்தில் தீ பிடித்து எரிய துவங்கியது. இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அளித்த தவகலரின் பேரில் கோவை கணபதி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் அங்கு நிறுத்தி வைக்கப்படிருந்த 3 கார்கள் மற்றும் 1 பைக் தீயில் எரிந்து சேதமடைந்தது. 

இது குறித்து தாமஸ் வில்லியம் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கு மின் கசிவு காரணா? அல்லது வேறு ஏதேனுமா? என்பன போன்ற காரணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw