கோவையில் அண்ணாமலை தோற்றுவிடுவார் என்று கூறியதால் தன் கையை தானே துண்டித்து கொண்ட பாஜக நிர்வாகி...

published 2 weeks ago

கோவையில் அண்ணாமலை தோற்றுவிடுவார் என்று கூறியதால் தன் கையை தானே துண்டித்து கொண்ட பாஜக நிர்வாகி...

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/FePOfH8LTBKE40nzrfPpnD

கோவை: கடலூர் மாவட்டம்  முள்ளிபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துரை ராமலிங்கம். இவர்  கடலூர் மாவட்ட பாஜக துணைத் தலைவராக உள்ளார்.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை க்கு ஆதரவு திரட்ட 10 நாட்களாக கோவையில் தங்கி பணிகள் ஆதரவு திரட்டி வருகிறார்.


இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் இவர் பிரச்சாரம் முடிந்த நிலையில், அண்ணாமலை தோற்று விடுவார் , அவர் வெற்றி பெற வாய்ப்பு என குறைவு என சிலர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த துரை ராமலிங்கம், அண்ணாமலை தான் வெற்றி பெற வேண்டும் என்று கூறி கத்தியை எடுத்து அவரது இடது கை ஆள்காட்டி விரலை துண்டித்துக் கொண்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை  தனியார்  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw