கோவையில் குடிபோதையில் தந்தையை தாக்கிய மகன் கைது…

published 1 week ago

கோவையில் குடிபோதையில் தந்தையை தாக்கிய மகன் கைது…

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/HnNiEmYAweu4lUIbHWUht6

கோவை: கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூரை சேர்ந்தவர் சேகர் மகன் தீனா(24). தொழிலாளி. 

குடிப்பழக்கம் உடைய இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. இதேபோல், நேற்று முன்தினம் இரவில் அவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது தந்தை மற்றும் சகோதரி கண்டித்தனர். 


அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த தீனா இருவரையும் தாக்கி மிரட்டினார். இது குறித்து சேகர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீனாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw