கோவையில் குடிபோதையில் தந்தையை தாக்கிய மகன் கைது…

published 9 months ago

கோவையில் குடிபோதையில் தந்தையை தாக்கிய மகன் கைது…

கோவை: கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூரை சேர்ந்தவர் சேகர் மகன் தீனா(24). தொழிலாளி. 

குடிப்பழக்கம் உடைய இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. இதேபோல், நேற்று முன்தினம் இரவில் அவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது தந்தை மற்றும் சகோதரி கண்டித்தனர். 

அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த தீனா இருவரையும் தாக்கி மிரட்டினார். இது குறித்து சேகர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீனாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe