கோவை அரசு மருத்துவமனையில் 100 கிலோ செம்பு கம்பியை திருடியவர் கைது…

published 9 months ago

கோவை அரசு மருத்துவமனையில் 100 கிலோ செம்பு கம்பியை திருடியவர் கைது…

கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மின் பணிக்காக பொருட்கள் இருப்பு அறையில் செம்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த கம்பிகள் அடிக்கடி திருடு போனது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அங்கு பிளம்பராக வேலை பார்த்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜெயதாஸ்(28) என்பவர் திருடியது தெரியவந்தது. அவர் சிறிது, சிறிதாக ரூ. 85 ஆயிரம் மதிப்பிலான 100 கிலோ செம்பு கம்பிகளை திருடி விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe