கோவை அரசு மருத்துவமனையில் 100 கிலோ செம்பு கம்பியை திருடியவர் கைது…

published 1 week ago

கோவை அரசு மருத்துவமனையில் 100 கிலோ செம்பு கம்பியை திருடியவர் கைது…

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/Gymsw6mPrOK0fU2lrUKwUs

கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மின் பணிக்காக பொருட்கள் இருப்பு அறையில் செம்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த கம்பிகள் அடிக்கடி திருடு போனது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அங்கு பிளம்பராக வேலை பார்த்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜெயதாஸ்(28) என்பவர் திருடியது தெரியவந்தது. அவர் சிறிது, சிறிதாக ரூ. 85 ஆயிரம் மதிப்பிலான 100 கிலோ செம்பு கம்பிகளை திருடி விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. 


இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw