கோவையில் அதிகாரிகள் தங்களை அடிமைகள் போன்று நடத்துவதாக தூய்மைப்பணியாளர்கள் குற்றச்சாட்டு...

published 9 months ago

கோவையில் அதிகாரிகள் தங்களை அடிமைகள் போன்று நடத்துவதாக தூய்மைப்பணியாளர்கள் குற்றச்சாட்டு...

கோவை: கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள அதிகாரிகள் தங்களை அடிமைகள் போன்று நடத்துவதாகவும் இழிவாக பேசுவதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மேலும் பகுதி நேர வேலை, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி மனு அளித்தனர்.

இது குறித்து பேசிய கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் சங்க உறுப்பினர் ரத்தினகுமார், பகுதி நேர வேலை அளிக்கப்பட வேண்டும் எனவும் பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினார். 

மேலும் அங்குள்ள பணிதள பொறுப்பாளர்கள்  தூய்மை பணியாளர்களை ஒருமையில் பேசுவது கொத்தடிமைகள் போன்று வேலை வாங்குவது மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்த அவர் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe