கோவையில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது…

published 9 months ago

கோவையில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது…

கோவை: கோவை தண்ணீர்பந்தல் பாரதிநகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று அவர் நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக மசக்காளி பாளையம் சென்று கொண்டிருந்தார். 

அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றபோது 4 பேர் கும்பல் அவரை மிரட்டி பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்த ஆத்திரத்தில் நான்கு பேரும் கத்திமுனையில் அவரிடம் இருந்த ரூ. 1,500 ஐ பறித்து சென்றனர். இது குறித்து பாலசுப்பிரமணியன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். 

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பணம் பறித்தது பீளமேடு பாட்டாளம்மன் கோயில் தெருவை சேர்ந்த சூர்யா(23), உடையாம்பாளையத்தை சேர்ந்த சிவா(19), பீளமேட்டை சேர்ந்த ஹரிபிரசாத்(20), சின்னியம்பாளையம் பாலதண்டாயுதம் தெருவை சேர்ந்த விஜய்(26) என்பது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe