கோவை வ.உ.சி. உயிரியல் பூங்கா விலங்குகள் விரைவில் இடமாற்றம்

published 2 years ago

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்கா விலங்குகள் விரைவில் இடமாற்றம்

கோவை: கோவை வ.உ.சி. உயிரியல் பூங்கா அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள விலங்குகள் விரைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளன. கோவையின் அடையாளங்களில் ஒன்றாக மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்கா உள்ளது. கடந்த 1965-ம் ஆண்டு இப்பூங்கா உருவாக்கப்பட்டது. 

ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என 40 இனங்களில் 532 விலங்கினங்கள் வரை உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் 300 முதல் 350 பேர் வார நாட்களிலும், 1500 முதல் 2000 பேர் வரை விடுமுறை நாட்களிலும் வந்து சென்றனர்.

இதனிடையே, பூங்கா மற்றும் விலங்கினங்களின் பராமரிப்பு விவகாரத்தில் பல்வேறு குறைபாடுகள் காரணமாக ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுபாடு துறையின் கீழ் செயல்படும் ஒன்றிய உயிரியல் பூங்கா ஆணையம் கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. இதனால், வ.உ.சி. உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பூங்காவில் உள்ள விலங்குகள் விரைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் விரைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளன. முதலைகள் உடுமலை அமராவதி முதலை பண்ணை, சென்னை முதலை பண்ணைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல், மான்கள் உள்ளிட்ட உயிரினங்கள், பறவை வகை உயிரினங்கள் அனைத்தும் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe