தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை மழைநீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை

published 2 years ago

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை மழைநீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் சாலையில் தேங்காமல் வடிவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பிரதான கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றி கால்வாயிலுள்ள செடி, கொடிகளைத் தூர்வாரி மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளன. அதே போல், கோவை மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘மழைநீர் தங்குதடையின்றி செல்ல ஜே.சி.பி.இயந்திரங்கள் உதவியுடன் அனைத்து கால்வாய்களிலும் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. கழிவு நீர் கால்வாய் அடைப்புகள் சூப்பர் சக்கர் வாகனம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. 

மேம்பாலங்கள் கீழ் மழைநீர் தேங்காமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. போதுமான அளவு மோட்டார்களும் உள்ளன’’ என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe