ஆலந்துறை காமாட்சி அம்மன் கோவில் திருவிழா- கொட்டும் மழையில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்...

published 9 months ago

ஆலந்துறை காமாட்சி அம்மன் கோவில் திருவிழா- கொட்டும் மழையில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்...

கோவை: கோவை ஆலந்துறை காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் கொட்டும் மழையில் தீச்சட்டி எடுத்தும், அழகு குத்தி கிரேனில்  ஊர்வலமாய் வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 

கோவை ஆலந்துறை காமாட்சி அம்மன் கோவில் 97வது ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகு குத்தி,  பூசட்டி எடுக்கும் நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது.  இதில் சுமார் 1,000 திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு  பூச்சட்டி எடுத்து  ஊர்வலமாக சென்று நேர்த்தி கடனை செய்தனர். அதேபோல் கிரேன் மூலம் தொங்கியபடி அழகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் பக்தர்கள் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் வந்து காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர். 

ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறும் காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் ஆலாந்துறை மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஜமாப், கேரளா செண்டை மேளம், கேரளா தையம் ஆட்டம் என பக்தர்கள் திருவிழா கலைகட்டியது.  இறுதி நாளான இன்று  மஞ்சள் நீராட்டு விழா  இசை நிகழ்ச்சிகளுடன் காமாட்சி அம்மன் கோவில் திருவிழா நிறைவடைகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe