கோவையில் ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5 பேருக்கு வலை…

published 9 months ago

கோவையில் ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5 பேருக்கு வலை…

கோவை: கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் ராமசாமி(24). இவர் திருச்சி ரோடு சிங்காநல்லூரில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று அவர் ஓட்டலில் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார். அப்போது உணவருந்த 5 பேர் ஓட்டலுக்கு வந்தனர். அதில், ஒருவர் பாதையை மறைத்தவாறு உட்கார்ந்துள்ளார். 

அவரை ஓரமாக உட்கார சொன்னபோது, ராமசாமிக்கும், 5 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த 5 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி ராமசாமி மற்றும் அவரது தந்தையை தாக்கினர். மேலும் ஓட்டலில் இருந்த டேபிள், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். 

பின்னர் அவர்களை மிரட்டி விட்டு 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த ராமசாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். .

இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டலை சூறையாடிய 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe