திருமணமாகாத பாய்ஸ் உஷாரா இருங்க.. கோவையில் நூதன மோசடி!

published 9 months ago

திருமணமாகாத பாய்ஸ் உஷாரா இருங்க.. கோவையில் நூதன மோசடி!

கோவை: கோவையில் திருமண தகவல் மையம் மூலம் பழகி தொழில் அதிபரிடம் ரூ. 23 லட்சம் நூதன மோசடி நடைபெற்றது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையை சேர்ந்தவர் 37 வயது வாலிபர். தொழிலதிபர். பிஇ பட்டதாரியான இவர் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இந்நிலையில், அவர் மறுமணம் செய்வதற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து வைத்திருந்தார்.

அதன் மூலம் இளம்பெண் ஒருவர் வாலிபருக்கு பழக்கமானார். இருவரும் செல்போன் எண்களை பரிமாறி அடிக்கடி பேசி வந்துள்ளனர். அப்போது அந்த பெண் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார்.

இதனை நம்பிய அவர் அந்த பெண் கூறிய வங்கி கணக்கில் பல கட்டங்களாக ரூ. 23 லட்சம் அனுப்பினார். ஆனால் அந்த பெண் கூறியபடி எந்த விதமாக லாப தொகையும் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த வாலிபர் அந்த பெண்ணை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றார்.

ஆனால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மொத்தமாக ரூ. 23 லட்சத்தை ஆன்லைன் மோசடி கும்பல் சுருட்டி விட்டனர். இது குறித்து தொழில் அதிபர் கோவை மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe