கோவையில் 7 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்; 2 பேர் கைது….

published 9 months ago

கோவையில் 7 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்; 2 பேர் கைது….

கோவை: கோவை துடியலூரில் 7 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்த போலீசார் வடமாநில வாலிபர்கள் 2 பேரை கைது செய்தனர்.
 

கோவையில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். 

அப்போது அங்கு நின்றிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, போலீசார் சோதனை செய்தபோது இருவரும் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம்நந்த் ஷானி(23), ராஜூவ் ஷகானி(21) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe