கோவில் திருவிழாவில் திருத்தேர் பவனியை துவக்கி வைத்து நடனமாடி ஊர்வலம் சென்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

published 8 months ago

கோவில் திருவிழாவில் திருத்தேர் பவனியை துவக்கி வைத்து நடனமாடி ஊர்வலம் சென்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: கோவையில் நடைபெற்றுவரும் கோவில் திருவிழாவில் முன்னாள் அமைச்சரும்,அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு திருத்தேர் பவனியை துவக்கிவைத்து. நடனமாடி ஊர்வலமாக சென்றார்.

கோவை சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று சக்தி கரகம், மற்றும் அருள்மிகு சக்திமாரியம்மன் தேர் பவனி நடைபெற்றது. 

இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு தேர் பவனியை துவக்கி வைத்தார். மேலும் பக்தர்களுடன் உற்சாக நடனமாடி ஊர்வலமாக நடந்துசென்றார்.  

 

திருத்தேரானது, பி.கே.புதூர், கோவைபுதூர் பிரிவு, உட்பட பாலக்காடு பிராதன சாலைவழியாக ஊர்வலமாக சென்றது. அருள்மிகு ஸ்ரீ சக்திமாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  மேலும் இந்த விழாவில் ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்தும், முளைப்பாரிகள் எடுத்தும், பூ சட்டிகள் எடுத்தும் நேர்த்திக்கடன் செய்தனர். 

மேலும் இளைஞர்களின் சிலம்பாட்டம், வான வேடிக்கை என்று திருவிழா களைகட்டி வருவதால் கோவை சுகுணாபுரம் பகுதி முழுவதும் விழாகோலம் பூண்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe