Breaking: உஷார்... கோவை, திருப்பூருக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுப்பு!

published 8 months ago

Breaking: உஷார்... கோவை, திருப்பூருக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுப்பு!

கோவை: கோவை, திருப்பூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான அரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த சில நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட நிலையில், கோவை மாநகர் பகுதி மற்றும் ஊரகப்பகுதிகளில் 3 மணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்தது.

அதிகபட்சமாக நேற்று ஆழியாறு சுற்றுவட்டாரத்தில் 146 மி.மீ., மழை பதிவானது, கோவை மாவட்டத்தில் மொத்தமாக 721 மி.மீ மழை பதிவான நிலையில் இன்றும் கோவைக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

கோவை மட்டுமல்லாது, திருப்பூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் இந்த வானிலை முன்னறிவிப்புக்கு ஏற்ப தங்கள் பயணங்களை வகுத்துக்கொள்ளவும், பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe