ஆன்லைன் வேலை- கோவையில் ஆசிரியையிடம் ரூ.28 லட்சம் மோசடி!

published 8 months ago

ஆன்லைன் வேலை-  கோவையில் ஆசிரியையிடம் ரூ.28 லட்சம் மோசடி!

கோவை: கோவையில் ஆன்லைன் வேலை என ஆசிரியையிடம் ரூ.28 லட்சம் மோசடி நடந்துள்ளது.

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் அனிதா (40). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.

இவர் பகுதிநேர வேலை இருப்பதாக ஆன்லைனில் வந்த தகவலை பார்த்து அதில் இடம்பெற்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டார். அப்போது ஆன்லைனில் ரேட்டிங் பணி வழங்குவதாகவும், தாங்கள் வைக்கும் போட்டிகளில் வெற்றி பெற்றால் ஊக்கத்தொகை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அனிதா ஆன்லைனில் நடத்தப்பட்ட ரேட்டிங் மற்றும் டாஸ்க்குகளில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு முதல் தவணை கமிஷனாக 1,500 ரூபாய் வழங்கப்பட்டது.

மேலும் அதிக தொகை கட்டி டாஸ்க்கில் பங்கேற்றால் தொகைக்கு ஏற்ப கமிஷன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த நபர்கள் கூறிய வங்கிக்கணக்கில் 17 பரிவர்த்தனைகள் மூலமாக 28.55 லட்ச ரூபாய் அனுப்பினார்.

ஆனால் அதற்கு பின் அவருக்கு கமிஷன் வழங்கப்படவில்லை. முதலீடு செய்த பணமும் திரும்ப வழங்கப்படவில்லை.

ஏமாற்றப்பட்டதை அறிந்த அனிதா, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பணம் இல்லாத நிலையில் தங்க நகைகளை அடமானம் வைத்து அனிதா ஆன்லைன் டாஸ்க்கிற்கு பணம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. மோசடி கும்பலிடம் ஏமாந்த பின்னரே ஆன்லைன் வேலை என்ற பெயரில் நடக்கும் முறைகேடுகளை தெரிந்து போலீசாரிடம் புலம்பியுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe