கோவை வஉசி பூங்காவில் பழுதான நிலையில் உள்ள மின் வயர்களை எடுக்க கோரிக்கை…

published 8 months ago

கோவை வஉசி பூங்காவில் பழுதான நிலையில் உள்ள மின் வயர்களை  எடுக்க கோரிக்கை…

கோவை: கோவை வஉசி பூங்காவில் பழுதான நிலையில் மின் வயர்கள் உள்ளதாகவும், இதனை சரிபார்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை சரவணம்பட்டி சின்னவேடம்பட்டியில் உள்ள ராணுவ குடியிருப்பில் 2 குழந்தைகள் மின்சாரம் தாக்கி பலியாயினர். தரைக்கு அடியில் பதிக்கப்பட்ட மின்சார வயர் சேதமாகி மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியதோடு குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் பழுதான நிலையில் உள்ள மின் இணைப்புகளை சரிபார்க்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. 

மேலும் மழைக்காலங்களில் மக்கள் கவனமாக இருக்கவேண்டும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், கோவை வஉசி பூங்காவில் மின்சார வயர்கள் பழுதான நிலையில் உள்ளன. பாதுகாப்புக்காக வயரின் மீது போடப்பட்ட பிளாஸ்டிக் பைப்புகள் உடைந்து வயர் மட்டும் தனியாக தொங்குகிறது. 

இது குறித்து மக்கள் கூறுகையில், பூங்காவில் மின்சார இணைப்புக்காக போடப்பட்ட வயர்கள் சேதமான நிலையில் தரையில் கிடக்கிறது. வயரின் மீது போடப்பட்ட பிளாஸ்டிக் பைப்புகள் உடைந்த நிலையில் உள்ளன. இது தவிர கோவையில் மக்கள் அதிகம் கூடும் பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் மின் இணைப்புகள் சரியாக உள்ளதா? அல்லது சேதமான நிலையில் உள்ளதா? என கண்காணித்து அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe