கோவையில் ஓரின சேர்க்கைக்கு ஆசைப்பட்டு நகையை இழந்த ஊழியர்!

published 8 months ago

கோவையில் ஓரின சேர்க்கைக்கு ஆசைப்பட்டு நகையை இழந்த ஊழியர்!

கோவை:கணபதி நல்லாம்பாளையம் பகுதியைசேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 34). ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.. வாட்ஸ் அப்பில் சம்பத் என்பவர் இவருக்கு அறிமுகமானார்.
நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரனை சம்பத் ஓரினச்சேர்க்கை உல்லாசம் அனுபவிக்கலாம் என கூறி ரத்தினபுரி பாலம் அருகில் வரக்கூறி உள்ளார். 
 

ராஜேந்திரனும் அங்கு சென்றார். அப்போது ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதற்காக சம்பத் அவரது ஆடையை கழற்றி அருகில் வைக்கும்படி கூறியுள்ளார்.
இதை நம்பி ராஜேந்திரன் ஆடைகளை கழற்றி விட்டு நின்றுள்ளார். இப்போது திடீரென அங்கு வந்து 6 பேர் கொண்ட கும்பல் அவரிடம் இருந்த தங்க மோதிரம், தங்க சங்கிலி ஆகியவற்றை திருடிவிட்டு சென்றுவிட்டது..
 

இதனால் ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி வழக்கு பதிவு  செய்து 6 பேரையும் தேடி வருகிறார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe