KMCH மருத்துவமனையில் நடைபெற்ற கொலை வழக்கு- கைது செய்யப்பட்ட மருத்துவமனை நிர்வாகிகள்...

published 8 months ago

KMCH மருத்துவமனையில் நடைபெற்ற கொலை வழக்கு- கைது செய்யப்பட்ட மருத்துவமனை நிர்வாகிகள்...

கோவை: KMCH மருத்துவமனையில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஜூன் 12 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH மருத்துவமனையில் அங்கு பணிபுரியும் செக்கியூரிட்டி மற்றும் நிர்வாகத்தினர்களால் ராஜா என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக 
மருத்துவமனை துணை தலைவர் நாராயணன், வர்த்தக பிரிவு மேலாளர் சசிகுமார்,தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ரமேஷ், மருத்துவமனை நெட்வொர்க் பிரிவு அலுவலர் சரவணன் மற்றும் காவலாளிகள் சரவணகுமார், மணிகண்டன்,சதீஷ்குமார், சுரேஷ் உள்ளிட்ட 8 பேர் பீளமேடு காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து அவர்கள் முகமூடி அணிந்தபடி காவல் நிலையத்தில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டு பின்னர் அங்கிருந்து கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  

இந்த வழக்கு விசாரித்த  நீதிபதி வருகின்ற ஜூன் 12-ம் தேதி வரை 8 பேரையும் நீதிமன்ற காவல் அடைக்க உத்தரவிட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe