கோவையில் 90 வயது மூதாட்டி உள்பட 5 பேர் மாயம்- போலீசார் தேடுதல் வேட்டை…

published 8 months ago

கோவையில் 90 வயது மூதாட்டி உள்பட 5 பேர் மாயம்- போலீசார் தேடுதல் வேட்டை…

கோவை: கோவை, வடவள்ளி அருகே உள்ள பொம்மனபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி திப்பாக்காள் (வயது 90).
திப்பாக்காள் வீட்டில் இருந்து ஆட்டோவில் வெளியில் சென்றவர் திடீரென மாயமாகிவிட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மகன் கந்தசாமி வடவள்ளி போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் பிராங்கிலி வில்சன், சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

இதேபோன்று ரத்தினபுரி அருள் நகரை சேர்ந்த துரைமுருகன் ( 43) என்பவர் கடந்த மாதம் 13ஆம் தேதி ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக சென்றவர் வீடு திரும்பவில்லை அவரை அவரது மனைவி நிர்மலா போனில் தொடர்பு கொண்ட போது நண்பரிடம் பணம் வாங்கிவிட்டு வருவதாக கூறியுள்ளார்.

ஆனால் அதன் பிறகு அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட உள்ளது. இதனால் நிர்மலா ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவகுமார் விசாரணை நடத்தி வருகிறார.

அதே போன்று ராமநாதபுரம், அம்மன்குளம் வீட்டு வசதி வாரிய, குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கௌரி என்பவர் மகள் லட்சுமி (வயது 21) என்பவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் திருப்பூரிலிருந்து திரும்பி வந்து தாய் கௌரியுடன் அம்மன் குளத்தில் இருந்து வந்தார்.

இந்நாளையில் நேற்று மாலை குழந்தையுடன் சென்ற லட்சுமி வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து கௌரி ராமநாதபுரம் போலீஸ் புகார் செய்தார்.
மேலும் வடவள்ளி அருகே உள்ள வீரகேரளம் பொங்கலியூர் கௌரியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் 17 வயது மகள் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் மாயமாகிவிட்டார்.

இது குறித்து முருகேசன் நேற்று வடவள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முருகேசனின் மகனை தேடி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe