கோவை சிறையில் ஆயுள் தண்டனை கைதி சாவு…

published 8 months ago

கோவை சிறையில் ஆயுள் தண்டனை கைதி சாவு…

கோவை: ஊட்டி கோத்தகிரியை சேர்ந்தவர் ரங்கன்(30). இவர் கோத்தகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். 

இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களாக கோவை சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் நேற்று அவர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

கைதிகள் வார்டில் சேர்க்கப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe