கோவையில் மாலை நேரத்து சாரல் மழை.. நாளை நிலவரம் என்ன?

published 8 months ago

கோவையில் மாலை நேரத்து சாரல் மழை.. நாளை நிலவரம் என்ன?

கோவை: கோவையில் மாலை நேரத்தில் பெய்த இதமான சாரல் மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

கடந்த ஒருவாரத்திற்கு முன்பு கோவையில் பரவலாக மழை பெய்தது. இதனால் கடும் வெயிலின் தாக்கம் குறைந்தது. கடந்த ஒரு சில தினங்களாக மழைப்பொழிவு முழுவதும் குறைந்ததால் மீண்டும் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது.

இன்று காலை முதலே மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் மாலை 4 மணிக்கு மேல் பல்வேறு பகுதிகளிலும் கார்மேகங்கள் சூழ்ந்து இதமான காற்று வீச துவங்கியது. 

மேலும் மாலை 7 மணிக்குமேல் கோவை காந்திபுரம், ரயில்நிலையம், டவுன்ஹால், உக்கடம், உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.

இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவையில் மலைப்பகுதிகளில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மாநகர பகுதியில் நாளையும் சாரல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe