கோவையில் எலக்ட்ரானிக்ஸ் கடையில் ரூ. 25 லட்சம் கையாடல்- பெண் ஊழியர் கைது…

published 8 months ago

கோவையில் எலக்ட்ரானிக்ஸ் கடையில் ரூ. 25 லட்சம் கையாடல்-  பெண் ஊழியர் கைது…

கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள வணிக வளாகத்தில் எலக்ட்ரானிக்ஸ் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு சமீபத்தில் கணக்கு தணிக்கை நடைபெற்றது. 

அதில், ரூ. 24.81 லட்சம் கையாடல் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. கடையில் விற்பனை பொறுப்பாளராக வேலை பார்த்த கோவை பன்னிமடையை சேர்ந்த கமலி(32) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது. 

இது குறித்து கடை மேலாளர் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவில் கமலி மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe