தொடங்கியாச்சு ஸ்கூல்... மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்!

published 8 months ago

தொடங்கியாச்சு ஸ்கூல்... மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்!

கோவை: கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின் வழக்கமாக ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு ஜூன் 4ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது.

மேலும், தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்ததாலும், ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கு கோடை விடுமுறைக்குப் பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

கோவையில் பல்வேறு பள்ளிகளிலும், மாணவர்களை வரவேற்க ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். நீண்ட இடைவெளிக்குப்பின் நண்பர்களை சந்திக்கப்போகும் குஷியின் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்குச் சென்றனர்.

திருச்சி சாலை புனித பிரான்சிஸ் பள்ளியில் மாணவிகள் வரவேற்க சக மாணவிகள் பூக்கள் போல உடை அணிந்து, இனிப்புகளை வழங்கி உற்சாகப்படுத்தினர்.

சில பள்ளிகளில் ஆசிரியர்கள் மேளதாளம் வாசித்தும், பாடல் பாடியும் மாணவர்களை வரவேற்றனர். இத்தகைய சிவப்பு கம்பள வரவேற்பால் மாணவர்கள் குஷியடைந்துள்ளனர்.

மழலைகள் பள்ளிக்குச் செல்லும் வீடியோ இங்கே!

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe