போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் கோவை

published 8 months ago

போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் கோவை

கோவை: கோவை மாநகர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே மாநகரின் சாலைகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகின்றன.

இதனிடையே கடந்த இரண்டு தினங்களாக முகூர்த்த தினம் என்பதாலும், விடுமுறை தினங்கள் என்பதாலும், பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்டது.

திருச்சி சாலை, அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, ஆத்துப்பாலம், குனியமுத்தூர் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்துக் காணப்பட்டது.

இதனிடையே கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கோவையில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது.

மீண்டும் மழை துவங்கும் முன் சாலைகளை சீரமைத்து, மேம்பாலங்களை விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோவை மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe