திருநங்கைகளுக்காக சிறப்பு முகாம்- எப்போது? எங்கு? என்னென்ன மேற்கொள்ளப்படுகிறது என்ற விவரங்கள் இதோ!

published 8 months ago

திருநங்கைகளுக்காக சிறப்பு முகாம்- எப்போது? எங்கு? என்னென்ன மேற்கொள்ளப்படுகிறது என்ற விவரங்கள் இதோ!

கோவை: திருநங்கைகளுக்கு முழுமையான சமூகபாதுகாப்பும். சமூக அங்கீகாரத்தை அளித்து அவர்களையும் சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்று கொள்ளும் பொருட்டு, திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்குதல். ஆதார் அட்டையில் திருத்தம். வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீட்டு அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றினை வழங்கிட 21.06.2024 அன்று சிறப்புமுகாம் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளில் ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, மருத்துவக் காப்பீட்டு அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை பெறாத திருநங்கைகளின் விவரங்களை பதிவுசெய்து அடையாள அட்டை ஆகியவற்றினை தகுதியான அனைத்து திருநங்கைகள் சமூகத்தினருக்கும் வழங்கிடும் பொருட்டு 21.06.2024 அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் அனைத்து திருநங்கைகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்டஆட்சித்தலைவர் கிராந்திகுமார், தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe