கோவையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 4.30 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்...

published 8 months ago

கோவையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 4.30 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்...

கோவை: பேரூர் வட்டம்,கலிக்கநாயக்கன்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 381 பயனாளிகளுக்கு ரூ.4.30 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் வட்டம், கலிக்கநாயக்கன்பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 381 பயனாளிகளுக்கு ரூ.4.30 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி வழங்கினார். 

இம்முகாமில் தாளியூர் பேரூராட்சி தலைவர் தண்டபாணி, தென்கரை பேரூராட்சி தலைவர் மகாலெட்சுமி பிரசாந்த் தாளியூர் பேரூராட்சி துணைத் தலைவர மலர்விழி பிரபு, வருவாய் கோட்டாட்சியர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, தென்னம்ம நல்லூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி திட்டத்தில் 5.58 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும், புதுக்குட்டை  பணிகளை பார்வையிட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe