துடியலூரில் சிறுநீர் கழிக்க வண்டியை நிறுத்தியவரிடம் வழிப்பறி!

published 8 months ago

துடியலூரில் சிறுநீர் கழிக்க வண்டியை நிறுத்தியவரிடம் வழிப்பறி!

கோவை: கோவை அடுத்த துடியலூர் நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஹரிஹரன்(21). டீ மாஸ்டர். இவர் நேற்று ஸ்கூட்டரில் துடியலூர் - வெள்ளக்கிணறு ரோட்டில் சென்று கொண்டிருந்தார். 

அங்கு சாலை ஓரமாக ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ஹரிகரனிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ. 500 ஐ பறித்து சென்றார். 

இது குறித்த புகாரின் பேரில், துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பணம், செல்போன் பறித்தது ரத்தினபுரி பிஎம் சாமி காலனியை சேர்ந்த கவுதம் (எ) ஒன்றரை கவுதம்(26) என்பது தெரியவந்தது. 

போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe