பக்ரீத் ஸ்பெஷல்: கோவையில் தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை!

published 8 months ago

பக்ரீத் ஸ்பெஷல்: கோவையில் தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை!

கோவை: பக்ரீத் பண்டிகையொட்டி கோவை மாநகராட்சி 86-வார்டில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு பிரியாணி, புத்தாடைகள் வழங்கப்பட்டன.

கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள 86-வது வார்டில் 100-க்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்களும், குடிநீர் வாரிய, மின் வாரிய ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையொட்டி 86-வது வார்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பிரியாணி, புத்தாடைகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், புல்லுக்காட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் வளாகத்தில் 86-வார்டு இஸ்லாமியர் மக்கள் சார்பாக 200-க்கும் மேற்பட்ட வார்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பிரியாணி மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe