மாணவர்களை தேடிச் சென்ற கோவை கமிஷனர்!

published 8 months ago

மாணவர்களை தேடிச் சென்ற கோவை கமிஷனர்!

கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் இன்று தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டார்.

அதன்படி தமிழக முதல்வரின் சிறப்புத்திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் தெற்கு மண்டல வார்டு எண் 97க்கு உட்பட்ட லென்ஸ்கார்ட் பகுதியில் 66 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள தார் சாலை பணியையும் வார்டு எண் 99க்கு உட்பட்ட போத்தனூர் செட்டிபாளையம் சாலை மாநகராட்சி பூங்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். 

முன்னதாக 95வது வார்டு குறிச்சி பிரிவு பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியை பார்வையிட்ட அவர் தரமான முறையில் உணவுகள் தயாரித்து வழங்கப்படுகிறதா என்பதனையும் உணவுப் பொருட்கள் இருப்பு குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தார்.  வார்டு எண் 100க்கு உட்பட்ட கணேசபுரம் மாநகராட்சி பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வுகள் கொண்ட ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மாணவ மாணவிகளுடன் வகுப்பறையில் அமர்ந்து கலந்துரையாடினார்.

இந்த ஆய்வின்போது துணை மேயர் வெற்றிச்செல்வன், துணையாணையாளர் சிவக்குமார், தெற்கு மண்டல குழு தலைவர் தனலட்சுமி, ஆளுங்கட்சித் தலைவர் கார்த்திகேயன் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe