வேலாண்டிபாளையத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

published 8 months ago

வேலாண்டிபாளையத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

கோவை: கோவை அருகே உள்ள வேலாண்டிபாளையம் கந்தசாமி நாயுடு தெருவை சேர்ந்தவர் சண்முகம்.

இவரது மனைவி மாணிக்கம் (65). இவர் இரவு நேரத்தில் வேலாண்டிபாளையம் அருகே உள்ள டாக்டர் ராமசாமி லே அவுட் பகுதி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் 2 பேர் வந்தனர்.

அவர்கள் மாணிக்கம் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க நகை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர். இது குறித்து மாணிக்கம் சாயிபாபா காலனி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe