தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தை பஞ்சாயத்து தலைவர் ஆக்கிரமித்துள்ளதாக புகார்...

published 7 months ago

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தை பஞ்சாயத்து தலைவர் ஆக்கிரமித்துள்ளதாக புகார்...

கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி கிட்டாம்பாளையம் பகுதியில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அந்த பட்டா நிலத்தை கிட்டாம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அந்த நிலத்தை மீட்டு தர வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் தலைவரிடம் மனு அளித்தனர். 

இது குறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் முதல் முதலமைச்சர் வரை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்கள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் முதல்வரை நேரில் சந்திக்க செல்ல உள்ளதாக கூறினர்.

மேலும் 2019 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்து வருவதாகவும் அதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe