ரூ.14.50 கோடி ஜி.எஸ்.டி இழப்பு ஏற்படுத்திய கோவை பெண் கைது

published 7 months ago

ரூ.14.50 கோடி ஜி.எஸ்.டி இழப்பு ஏற்படுத்திய கோவை பெண் கைது

கோவை: உத்திர பிரதேசம் மாநிலத்தில் கடந்த நிதி ஆண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை இருப்பது போல  காண்பித்து ரூ.10 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. மோசடி நடைபெற்றது தொடர்பாக அந்த மாநில குற்றத் தடுப்பு நடவடிக்கைப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்திருந்தது.

இந்த தகவலின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து  விசாரணை நடத்தி வந்தனர். இதில் போலி ஆவணங்கள் மூலம் அரசுக்கு ஜி.எஸ்.டி இழப்பு ஏற்படுத்தியதாக டெல்லி மத்திய பிரதேசம் ஹரியானா பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 45 பேர் மீது போலீசார்  நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் கோவையை சேர்ந்த சுகன்யா பிரபு (40) என்பவர் போலி ஆவணங்கள் மூலம் அரசுக்கு ரூ.14.50 கோடி ஜி.எஸ்.டி. இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது.

இந்நிலையில் அவர் திடீரென தலைமறைவாகி விட்டார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து  உத்தரப்பிரதேச மாநில போலீசார் சுகன்யா பிரபு குறித்த தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு  ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படுமென தெரிவித்தனர்.

இந்நிலையில் அவர் கோவையில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக உத்தரப்பிரதேச மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை வந்த உத்திர பிரதேச மாநில போலீசார் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் உதவியுடன் சுகன்யாபிரபுவை கைது செய்து உத்தரபிரதேசம் அழைத்துச் சென்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe