கோவையில் உயர் ரக போதை பொருள் விற்பனை!

published 7 months ago

கோவையில் உயர் ரக போதை பொருள் விற்பனை!

கோவை: கோவை உயர் ரக போதை பொருளுடன் வாலிபரை போலீசார் கைது செய்தனர். 2.250 கி.கிராமை பறிமுதல் செய்தனர்.

கோவையில் போதை பொருள், கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தெற்கு உக்கடம் அன்பு நகர் பகுதியில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக கடை வீதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை செய்தனர். அங்கிருந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரித்தனர். அதில், அவர் போதைப்பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தெற்கு உக்க்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் அப்துல் ஜெயில்(36) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 2.250 கி.கிராம் உயர் ரக போதை பொருள், ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe