தூய்மைப் பணியாளர் மீது தாக்கு; கோவை மார்க்ஸிஸ்ட் கவுன்சிலர் உட்பட இருவர் மீது வழக்கு!

published 7 months ago

தூய்மைப் பணியாளர் மீது தாக்கு; கோவை மார்க்ஸிஸ்ட் கவுன்சிலர் உட்பட இருவர் மீது வழக்கு!

கோவை: கோவையில் தூய்மைப் பணியாளரை தாக்கியதாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது வார்டு கவுன்சிலர் பூபதி உட்பட இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டின் தூய்மைப்பணி மேற்பார்வையாளர் சிவக்குமார். இவர் நேற்று காலை ஹோப் காலேஜ் அருகில் உள்ள வார்டு அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவேடு எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு, 24வது வார்டு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் பூபதி மற்றும் மணி ஆகியோர் வந்தனர். பி.ஆர்.புரத்தில் சாக்கடை தூய்மை செய்யவில்லை என்று கூறியுள்ளனர்.

இது வாக்குவாதமாக மாறியது, தொடர்ந்து மணி என்பவர் சிவக்குமாரை ஒருமையிலும், தகாத வார்த்தையிலும் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிவக்குமார் அளித்த புகாரின் பேரில், கவுன்சிலர் பூபதி மற்றும் மணி ஆகியோர் மீது இந்திய தண்டனைச்சட்டத்தின் கீழ் 294 b, 323 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe