கோவையில் இரும்பு வியாபாரி திடீர் சாவு…

published 7 months ago

கோவையில் இரும்பு வியாபாரி திடீர் சாவு…

கோவை: கோவை போத்தனூர் அம்மன் நகரை சேர்ந்தவர் குமரேசன்(48). இரும்பு வியாபாரி. இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை நெஞ்சு வலி ஏற்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமானார். 

இந்நிலையில், நேற்று குமரேசன் தனது நண்பர்கள் சிலருடன் குனியமுத்தூர்-பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு அருந்தினார். பின்னர் ஓட்டல் முன்பு நின்றிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். 

இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் நெஞ்சுவலியால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe