கோவையில் போலி ஒயர் விற்பனை- எலக்ட்ரிக்கல் கடைகள் மீது வழக்குப்பதிவு...

published 7 months ago

கோவையில் போலி ஒயர் விற்பனை- எலக்ட்ரிக்கல் கடைகள் மீது வழக்குப்பதிவு...

கோவை: கோவையில் போலி ஒயர் விற்பனை செய்த 4 எலக்ட்ரிக்கல் கடை மீது காப்புரிமை சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

சென்னையில் தனியாருக்கு சொந்தமான ஒயர் தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தினர் ‘பாலி கேப்’ என்ற பெயரில் எலக்ட்ரிக்கல் ஒயர் தயாரித்து கடைகளுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நிறுவனத்தின் ‘பாலி கேப் ஒயர்’ என்ற பெயரில் கோவையை சேர்ந்த எலக்ட்ரிக்கல் கடைகள் போலியாக விற்பனை செய்து வருவதாக சென்னை நிறுவனத்திற்கு தெரியவந்தது. 

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் சீனியர் மேலாளர் மணிமாறன் (74) ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்ததில், பாலி கேப் பெயரை பயன்படுத்தி போலி ஒயர் விற்பனை செய்தது அவிநாசி ரோட்டில் உள்ள குல்தேவி எலக்ட்ரிக்கல்ஸ், மம்தா எலக்ட்ரிக்கல்ஸ், ஸ்ரீ ஹரிஹர சுதன் எலக்ரிக்கல்ஸ், சோமசுந்தரா ரோட்டில் உள்ள ரத்னமணி எலக்ட்ரிக்கல்ஸ் என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் 4 எலக்ட்ரிக்கல் கடைகள் மீதும் காப்புரிமை சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe