கோவையில் கூடிய விரைவில் விளையாட்டு துறை மாணவர்களுக்கு புதிய விடுதி கட்டிடம்...

published 7 months ago

கோவையில் கூடிய விரைவில்  விளையாட்டு துறை மாணவர்களுக்கு புதிய விடுதி கட்டிடம்...

கோவை: கோவை நேரு விளையாட்டு அரங்கில் 60 மாணவர்கள் விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த விடுதியானது மைதானத்திற்கு உள்ளேயே அமைந்துள்ள நிலையில் தனி விடுதி கட்டிடம் தேவை என்ற கோரிக்கை பல நாட்களாக உள்ளது.

இந்நிலையில் 2024, சட்டமன்ற பேரவையில் விளையாட்டு துறை மானிய கோரிக்கையில் கோவை மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய விளையாட்டு மாணவர்களுக்கான விடுதி அமைக்கப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி கோவை நேரு உள்விளையாட்டு அரங்கம் அருகில் புதிய விடுதி கட்டிடம் கட்டுவதற்கான இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி  இன்று கோவைக்கு வருகை புரிந்தார்.

அவர் நேரு உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்று வரும் விடுதி மாணவர்களுடன் கலந்துரையாடி சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் விடுதி மாணவர்கள் அல்லாத இதர விளையாட்டு மாணவர்களுடனும் கலந்துரையாடினார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளருடன் இணைந்து விடுதி கட்டிடம் அமைப்பதற்கான இடங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe