வேளாண் பல்கலையில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி- தேதி அறிவிப்பு...

published 7 months ago

வேளாண் பல்கலையில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி- தேதி அறிவிப்பு...

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து
மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி 09.07.2024 மற்றும் 10.07.2024 ஆகிய இரண்டு நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. 

இந்த பயிற்சியானது, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும்.

இதில் முருங்கை பொடி, பருப்பு பொடி, சாம்பார் பொடி, பிஸ்கட், அடை மிக்ஸ்,
ஊறுகாய், நூடுல்ஸ், சூப் மிக்ஸ், காளான் பொடி, சூப் மிக்ஸ், பிஸ்கட், ஊறுகாய், பிரியாணி மிக்ஸ், பிழிதல்
தொழில் நுட்பம் ஆகியவை கற்று கொடுக்கப்படும்.

தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொள்வதற்குரிய வழிமுறைகள்
ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770/- (ரூ.1500 GST 18%) - பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும்.


மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. தொலைபேசி எண்- 94885 18268 
மின்னஞ்சல்: [email protected]

என பல்கலைக்கழகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe