HCL நிறுவனத்தில் வேலை... 2024ல் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

published 7 months ago

HCL நிறுவனத்தில் வேலை... 2024ல் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பிரபல HCL ஐடி நிறுவனத்தில்  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.  HCL நிறுவனம் இந்தியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.  தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் இயங்கி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் செயல்படும்  நிறுவனம் சார்பில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

மதுரையில்  காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.  அதன்படி, Graduate Trainee பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. இந்த பணிக்கு  பி.சி.ஏ/பி.எஸ்சி டிகிரியை 2024ம் ஆண்டில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 60 சதவீத மதிப்பெண்களுடன் டிகிரியை முடித்திருக்க வேண்டும்.

முக்கியமாக பணிக்கு தேர்வாகும் நபர்கள் 12 மாத அக்ரிமெண்ட்டில் பணியாற்ற வேண்டும் என கண்டிஷன் போடப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள்   மதுரையில் பணி நியமனம் செய்யப்படுவர்கள். மேலும் நாக்பூர், லக்னோவிலும் பணி நியமனம் செய்யப்பட  வாய்ப்பு உள்ளது. சம்பளம் விபரம் தெரிவிக்கப்படவில்லை. திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை.  எனவே,  முடிந்த வரை உடனே விண்ணப்பம்  செய்வது நல்லது. இந்த பணிக்கான  அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க லிங்கை க்ளிக் செய்யவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe