கோவையில் வீடு வாடகைக்கு கேட்பது போல் பெண்ணை உறவுக்கு அழைத்த நபர்!

published 7 months ago

கோவையில் வீடு வாடகைக்கு கேட்பது போல் பெண்ணை உறவுக்கு அழைத்த நபர்!

கோவை: கோவையில் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து இளம்பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த வடமாநில நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவையை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். திருமணமான இவர் நேற்று முன்தினம் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது அவரது வீடு ருகே நின்ற நபர் ஒருவர் அந்த இளம்பெண்ணிடம் இந்த பகுதியில் வீடு ஏதேனும் வாடகைக்கு கிடைக்குமா? என கேட்டார்.

அதற்கு அவர் இங்கு வீடு வாடகைக்கு இருப்பதாக தெரியவில்லை என கூறி கொண்டே செல்ல முயன்றார். அப்போது திடீரென அந்த நபர் இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து, பணம் தருகிறேன், வா இருவரும் ஜாலியாக இருக்கலாம் என தகாத உறவுக்கு அழைத்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண் கத்தி கூச்சல் போட்டார். ஆனால் அந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசி இளம்பெண்ணை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பினார்.

இது குறித்து இளம்பெண் சரவணம்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், இளம்பெண்ணிடம் அத்துமீறி தகாத உறவுக்கு அழைத்தது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதாகர் ஷாகு (58), என்பதும் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe