கோவை அருகே விபத்தில் சிக்கிய பெண்ணிடம் 7 பவுன் நகை திருட்டு…

published 7 months ago

கோவை அருகே விபத்தில் சிக்கிய பெண்ணிடம் 7 பவுன் நகை திருட்டு…

கோவை: கோவை அருகே உள்ள சீரநாயக்கன் பாளையம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பிரதீபா(34). இவர் கோவை தனியார் கல்லூரியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். 

தினமும் கல்லூரிக்கு வாகனத்தில் செல்வார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற போது விபத்தில் சிக்கினார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆட்டோ மூலம் சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்நிலையில் அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயின் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரதீபா சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தில் சிக்கிய போது நகை மாயமானதா அல்லது அவருக்கு உதவுவது போல் நடித்து யாராவது நகையை திருடி சென்றனரா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe